மதவாச்சியில் வெடிப்பொருட்களுடன் இருவர் கைது

269 0

201606250331029134_statue-kidnapping-case-deenadayalans-main-ally-arrested_secvpfமதவாச்சி, இசின்பெஸ்ஸகல பிரதேசத்தில் அனுமதிப் பத்திரமின்றி வெடிப்பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, அவர்களிடம் இருந்து 45 கிலோகிராம் கல்லுடைக்கும் வெடிப்பொருட்கள், மற்றும் சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் மதவாச்சி, இந்துருவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் அனுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவுள்ள நிலையில் மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.