விசேட தேவையுடையவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்

374 0

900501803may3siri-lவிசேட தேவையுடையவர்களின் உரிமைகள் மற்றும் வரப்பிரசாதங்களை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பலவிதமான குறைபாடுகள் காணப்படுகின்ற நிலையில் எதிர்காலத்தில் அவற்றை பூரணப்படுத்தி விசேட தேவையுடையவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கொழும்பு பாதிப்புற்றோருக்கான நிவாரண சங்கத்தின் 185 வது பொதுக் கூட்டத்த்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த கருத்துக்களை வௌியிட்டார்.