சிறிலங்காவில் வீதி விபத்தில் சிக்கிய 8 மாணவிகள்- ஒருவர் உயிரிழப்பு!

339 0

சிறிலங்காவில்  தெஹியத்தகண்டி-அரலகங்வில பிரதான வீதியின் போகஸ் சந்திப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ள நிலையில் மேலும் 7 மாணவிகள் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக வகுப்புக்குச் சென்ற குறித்த மாணவிகள் மீது கெப்ரக வாகனம் ஒன்று மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.