கரடியனாறு பகுதியில் கைக்குண்டுகள் மீட்பு

282 0

9877878625005384811926062434hand-grenede02கரடியனாறு பகுதியில் உள்ள வனத்தில் புதைக்கப்பட்ட நிலையில் 2 கைக்குண்டுகளும் சைனைட் குப்பியொன்றும் பொலிஸ் விசேட அதிரப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கரடியனாறு, வெலிகஹாகண்டிய வாவிக்கு பின்புறமாக உள்ள வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது அவை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனப்பகுதியில் மரமொன்றின் கீழ் புதைக்கப்பட்டிருந்த 2 கைக்குண்டுகளும், சைனைட் குப்பிகளும் மீட்கப்பட்டதாக அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

குறித்த வெடிபொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.