தாய்லாந்தில் இலங்கையர்கள் கைது

258 0

arrest-85ddd61-450x253தாய்லாந்தில் இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மனித கடத்தல் மற்றும் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவர்கள் இருவரும் தாய்லாந்து காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, அந்த நாட்டு இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

34 வயதான ஹர்சா குமார மற்றும் 26 வயதான மதுர துஸார ஆகியயோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இருந்து யுவதி ஒருவரை தாய்லாந்தின் ஊடாக ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு அனுப்புவதாக கூறி, தாய்லாந்தின் பட்டாயா என்ற இடத்தில் விபசாரத்தில் ஈடுபட பலவந்தப்படுத்தியுள்ளனர்.

எனினும் அந்த யுவதி தப்பிச்சென்று காவல்துறையில் சரணடைந்துள்ளார்.

இந்தநிலையில் அவரை தமது மனைவி என்று, கைதுசெய்யப்பட்ட இலங்கையர்களில் ஒருவர் கூறியபோதும் அதில் உண்மையில்லை என்று பட்டாயா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.