ஈரானில் ரயில்கள் மோதல்: 31 பேர் பலி

294 0

tamil_news_large_1656614_318_219ஈரானில் இரண்டு ரயில்கள் மோதி 31 பேர் பலியானார்கள்இ து தொடர்பாக செம்னான் மாகாண கவர்னர் கூறியதாவது: ஈரானின் செம்னான் மாகாணத்தில், நின்று கொண்டிருந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மீது மற்றொரு ரயில் மோதியது. இதில் 31 பேர் பலியானார்கள். இறந்தவர்களின் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 70 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயில் விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது எனக்கூறினார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணிகளில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர். டெஹ்ரான் கிழக்கே உள்ள ஹாப்ட் -கான் ரயில் நிலையத்தில் விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து காரணமாக 4 ரயில் பெட்டிகளின் தடம்புரண்டது. இரண்டு தீப்பிடித்து எரிந்தது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடினர்.