பதுளை மாவட்டத்தில் நிமல் சிறிபால அமோக வெற்றி: வடிவேல் சுரேஷ், அரவிந்தகுமாரும் வெற்றிவாகை!

356 0

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் நிமல் சிறிபால டி சில்வா 141,901 அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பதுள்ள மாவட்டத்தில் 6 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள நிலையில், அடுத்து 71,766 வாக்குகளை்ப பெற்று சுதர்சன தெனிபிட்டிய வெற்றிபெற்றுள்ளார்.

அத்துடன், தேனுக விதானகமகே 68,338 வாக்குகளையும், சாமர சம்பத் தசாநாயக்க 66,393 வாக்குகளையும், டிலான் பெரேரா 53,081 வாக்குகளையும் ஜானக திஸ்ஸகுட்டியாராச்சி 50,151 விருப்பு வாக்குகளையும் பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி பதுளை மாவட்டத்தில் மூன்று ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அதில் வடிவேல் சுரேஸ் 49,762 வாக்குகளையும், அரவிந்தகுமார் 45,491 வாக்குகளையும் சமிந்த விஜேசிறி 36,291 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.