யாழில் வாக்குப்பெட்டிகள் வாக்குகள் எண்ணும் நிலையத்திற்கு விமானத்தின் ஊடாக எடுத்துச் செல்லப்பட்டது

341 0

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சுமூகமான முறையில் பொதுத்தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் வாக்குப்பெட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உள்ள வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலேயே வழமை போன்று வாக்குகள் எண்ணும் பணிகள் நாளை நடைபெறும்.

மேலும் வாக்கெண்ணும் நிலையத்துக்கு பாதுகாப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக நெடுந்தீவில் இருந்து  விமானத்தின் மூலம் வாக்குப் பெட்டிகள மத்திய கல்லூரிக்கு எடுத்து வரப்பட்டன. அங்கே வாக்கெண்ணும் பணிகள் நடைபெற இருக்கின்றன.

எழுவைதீவு மற்றும் அனலைதீவு உள்ளிட்ட தீவுகளில் இருந்து கடற்படையின் பாதுகாப்புடன் வாக்குப் பெட்டிகள் எடுத்து வரப்பட்டன.

யாழ்ப்பாணம் நிருவாக மாவட்டத்தில் 4 இலட்சத்து 79 ஆயிரத்து 584 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள்.

இந்நிலையில் யாழ்.மாவட்டத்தில் 67.72 விதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.