திருகோணமலையில் வாக்களிப்பு சுமூகமாக நடைபெற்று வருகிறது

271 0

திருகோணமலை மாவட்டத்திலும் பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு சுமூகமாகவும் அமைதியாகவும் இன்று (புதன்கிழமை) காலை 07.00 மணி முதல் இடம்பெற்று வருகிறது.

திருகோணமலையிலுள்ள பல வாக்களிப்பு நிலையங்களிலும் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மற்றும் சுகாதார அதிகாரிகளினால் முன்மொழியப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுவதனை அவதானிக்க கூடியதாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக 22 தேர்தல் மாவட்டங்களிலும் ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 வாக்களர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.