ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

274 0

ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,834 ஆக அதிகரித்துள்ளது.

இன்று இதுவரை மொத்தம் 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த 6 பேரும் சமீபத்தில் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இன்று 07 பேர் குணமடைந்த நிலையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கையும் 2,524 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

தற்போது கொரோனா தொற்றுக்குள்ளான 299 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அத்தோடு 69 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளதுடன் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.