சிறைச்சாலை அதிகாரிகளுக்கு துப்பாக்கிகளை வழங்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை

289 0

உயிர் அச்சுறுத்தலை எதிர்க்கொண்டுள்ள சிறைச்சாலை அதிகாரிகளுக்கு துப்பாக்கிகளை வழங்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் பிரகாரம் மில்லிமீற்றர் – 9 ரக கை துப்பாக்கிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெலிகட , மெகசின் , கொழும்பு ரிமான்ட் , நீர்கொழும்பு , புஸ்ஸ ; மற்றும் அகுனுகொலபெலஸ்ஸ ஆகிய சிறைச்சாலைகளின் அதிகாரிகள் மற்றும் புலனாய்வுதுறை அதிகாரிகளுக்கு இந்த துப்பாக்கிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு துப்பாக்கிகளை பெற்றுக்கொள்ளும் அதிகாரிகளுக்கு விசேட பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது.