ஸ்ரீலங்காவில் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு

281 0

ஸ்ரீலங்காவில் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதற்கமைய அவர்களை ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரிகளுடைய சொத்துக்களை அரசுடமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரிகள் முறையற்ற வகையில் திரட்டிய பணத்தால் சேகரித்த சொத்துக்களையே அரசுடமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.