ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலி!!

295 0

ஸ்ரீலங்கா -பெலியத்த- தம்முல்லை பகுதியில்  இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 52 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இடம்பெற்றமைக்காக காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.