கழுகின் மேலதிக அறிக்கையைக் கோரியுள்ள நீதிமன்றம்

313 0

மீகொட- நாவலமுல்ல, ​மயான வீதியிலிலுள்ள விவசாய பண்​ணையொன்றிலிருந்து மீட்கப்பட்ட, கழுகை தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு ஒப்படைத்து, அது தொடர்பான மேலதிக அறிக்கையை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, ஹோமாகம நீதவான் நிலபுலி லங்காபுர உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் கழுகுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் தலா ஓர் இலட்ச ரூபாய் சரீரப் பி​ணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த பறவையை வளர்ப்பது குற்றமென, நீதிமன்றத்தில் அறிக்கைக​ள் முன்வைக்கப்பட்டிருந்தலும் நாட்டின் சட்டத்துக்கு அமைய, குறித்த கழுகு இனத்தை வளர்ப்பது குற்றமில்லை என்று, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுதத் விக்ரமரத்ன இதன்போது மன்றில் தெரிவித்துள்ளார்.