ஆட்பதிவுத்திணைக்களத்தில் விலைமனுக்கோரல் மோசடி தொடர்பில் ஆராய நடவடிக்கை

376 0

register-deptஆட்பதிவு திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் விலை மனுக்கோரல் மோசடி தொடர்பில் ஆராய்வதாக உள்விவகார அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்துள்ளார்.

தற்போது பயன்பாட்டிலுள்ள அடையாளஅட்டைக்கு பதிலாக அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ள இலத்திரனியல் அடையாளஅட்டைக்கான புகைப்படங்களை பெற்றுக் கொள்வதற்கு இந்த விலை மனுக் கோரலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதில் ஒரு அடையாள அட்டைக்காக 40 ரூபா விதம் விலை மனுக் கோரலொன்று முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அதனை பொருட்படுத்தாது 80 ரூபா விலை மனுக் கோரலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

இந்த மோசடி நடவடிக்கைக்கு எதிராக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சரத் குமார குரல் எழுப்பியமையினால், அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதாக கபே அமைப்பு நேற்று தகவல் வெளியிட்டிருந்தது.