ரயிலில் பயணச்சீட்டின்றி பயணித்த 108 பேர் கைது

346 0

trailwayரயில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரயில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தமை மற்றும் மூன்றவாது பெட்டியில் பயணிப்பதற்கான பயணச்சீட்டை பெற்று, இரண்டாவது பெட்டியில் பயணித்தமை போன்ற குற்றச்சாட்டுகளின்பேரில், 108 பேரை, ரயல்வே பாதுகாப்பு படையினர் கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 98 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அபராத தொகையாக 3 இலட்சத்து 18 ஆயிரம் ரூபாய், ரயில்வே திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அபராத தொகையை செலுத்தாத 10பேர், பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது