மாவீரர் நாளினை முன்னிட்டு கிளிநொச்சியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானம் (படங்கள் இணைப்பு)

318 0

15181247_1054018628054640_5625107011586093202_nகிளிநொச்சியில் மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை சிரமதானம் செய்யும் பணிகளில் பொது மக்கள் இன்று வெள்ளிக்கிழமை மிக மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும், வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை ஆகியோரின் ஏற்பாட்டிலேயே இச் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், முழங்காவில், தேராவில் ஆகிய பகுதிகளில் மொத்தமான 3 மாவீரர் துயிலும் இல்லங்கள் காணப்படுகின் போதிலும், யுத்தத்தின் பின்னர் தேராவில் மாவீரர் துயிலும் இல்லம் இலங்கை இரா|வத்தின் வசப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இராணுவத்தின் வசம் இருந்து மீள்குடியேற்றத்தின் போது விடுவிக்கப்பட்ட காணிக்குள் காணப்படும் கனகபுரம், மற்றும் முழங்காவில் பகுதிகளில் உள்ள இரு துயிலும் இல்லங்களே இப்போது துப்பரவு செய்யும் பணிகளில் பொது மக்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.

15181565_1054018451387991_8149871096831418191_n 15241314_1054017634721406_8552728457880941578_n fotorcreated-342