வயாகரா மாத்திரையால் தென்கொரியா பெண் அதிபரின் செல்வாக்கு வீழ்ச்சி

294 0

201611251123427293_skorean-president-approval-rating-hits-fresh-low-at-4-pct_secvpfதென்கொரியா நாட்டின் அதிபர் பார்க் கியூன் ஹே-வின் செல்வாக்கு மேலும் 4 சதவீதம் வீழ்ச்சியடைந்து அதலபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருக்கும் நெருங்கிய தோழியுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் ‘தென்கொரியா நாட்டின் அதிபர் பார்க் கியூன் ஹே-வின் செல்வாக்கு மேலும் 4 சதவீதம் வீழ்ச்சியடைந்து அதலபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

தென்கொரியாவில் அதிபர் பார்க் கியுன் ஹே தலைமையிலான அரசின்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பெருகிவருகிறது. அதிபரின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில் அரசு விவகாரங்களில் தலையீடு செய்துவருவதாகவும், அரசின் மிகமுக்கிய ரகசிய கோப்புகளை ஆய்வு செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பின.

மேலும், அதிபருடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி, பல நிறுவனங்களிடம் இருந்தும் நன்கொடைகளை பெற்று, இவர் ஆதாயம் அடைந்து வருவதாகவும் அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஆதாரங்களுடன் குற்றம்சுமத்தின.

இதையடுத்து, கடந்த முதல் தேதி சோய் சூன் சில் கைது செய்யப்பட்டார். அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றும், வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் வருகிறது.

தனது தோழியின் செயலுக்கு வருத்தம் தெரிவித்த அதிபர் பார்க் கியுன் ஹே, இவ்விவகாரத்தில் மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்பும் கேட்டார். இதற்கிடையில், அதிபர் பார்க் கியூன் ஹே, அரசுப் பணத்தை செலவிட்டு ஆண்களுக்கான செக்ஸ் எழுச்சியை தூண்டும் வயாகரா மாத்திரைகளை அதிகளவில் வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

இதுபற்றி அதிபர் மாளிகை அளித்த விளக்கத்தில் ஆப்பிரிக்கா உள்ளிட்ட கடல்மட்டத்துக்கு மேலே அமைந்துள்ள நாடுகளுக்கு அதிபர் செல்லும்போது அவருடன் செல்லும் அதிகாரிகளுக்கு ஏற்படும் படபடப்பை போக்க இந்த மாத்திரைகள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த விளக்கத்தை எதிக்கட்சியினரும் பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை.இந்நிலையில், அதிபர் பார்க் கியுன் ஹே-வுக்கு மக்களிடையே இருக்கும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு தொடர்பாக இன்று வெளியான கருத்துக்கணிப்பில் அவர் மேலும் 4 சதவீதம் பின்தங்கியுள்ளார். அவரது செயல்பாட்டை எதிர்த்து கருத்து தெரிவிப்பவர்களின் எண்ணிக்கை 93 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் தென்கொரியா அதிபரின் செல்வாக்கு இதற்கு முன்னர் எப்போதும் இல்லாதவகையில் தற்போது அதலபாதாளத்தில் வீழ்ந்துள்ளதாக அந்நாட்டின் பிரபல ஊடகங்கள் சுட்டிக்காட்டி வருகின்றன.