சிறிலங்காவில் இந்திய இளைஞன் உள்ளிட்ட மூவர் தற்கொலை

262 0

சிறிலங்காவில் வெள்ளவத்தை, மயூரா வீதியின் பின்புறத்தில் உள்ள தொடர்மாடி குடியிருப்பில் இளைஞன் ஒருவன் தற்கொலை செய்துக் கொண்டுள்ளான்.

நேற்று (23) மாலை 6 மணி அளவில் வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் இடம்பெறுகின்றன.

உயிரிழந்தவர் 25 வயதான இந்திய பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நீதவான் விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பான பிரேத பரிசேதனை இன்று (24) இடம்பெறவுள்ளது.

சம்பவம் தொடர்பில் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, மின்னேரிய பொத்தல்கர பகுதியில் வயல் காணியொன்றில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

58 வயதான மின்னேரிய பகுதியில் வசித்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் வெலிகந்த, மதுகல பகுதியில் 49 வயதான ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.