கொழும்பின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு

238 0

கொழும்பின் பல பகுதிகளில் நாளை (25) இரவு 8 மணி முதல் நாளை மறுதினம் (26) அதிகாலை 5 மணி வரையும் 9 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதேபோல் கொழும்பு 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.

அவசர திருத்தப் பணிகள் காரணமாகவே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.