கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

274 0

கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் பிரிவில்  இடம்பெற்ற விபத்தில் ஒருவர்   உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) இரவு 8.40 மணியளவில் கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்னார் யாழ் வீதியில்   இடம்பெற்றுள்ளது.

வீதியில் தரித்து நின்ற பார ஊர்தியுடன் யாழ் நோக்கி பயணித்த வான் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த பார ஊர்தியானது தரித்து நிற்பதற்கான எந்தவொரு  சமிஞ்ஞைகளும் இல்லாத நிலையில் யாழ் நோக்கிய திசையில் நிறுத்தப்பட்டுள்ளது.

அதே திசையில் பயணித்த வான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தியுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

விபத்தில் வானில் பயணித்த மூவரில் சாரதிக்கு அருகில் இருந்து பயணித்த நபர் உயிரிழந்ததுடன், சாரதி மற்றும் மேலுமொருவர் சிறு காயங்களிற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த விபத்தில் யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியை சேர்ந்த 43 வயதுடைய சுவேந்திரன் என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.