சிறிலங்காவில் புதிய கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்

265 0

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 2,753 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் (வியாழக்கிழமை)  ஒரேயொரு புதிய கொரோனா தொற்றாளர் மாத்திரம் இனங்காணப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் தொற்று  தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் இலங்கையில், கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 2,077 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 665  பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதுடன் சந்தேகத்தின்பேரில் 101 பேர், வைத்தியக்கண்காணிப்பிலும் உள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.