வவுனியாவில் கிணற்றில் இருந்து 14 மோட்டர் ஷெல்கள் மீட்பு

293 0

வவுனியா, ஒமந்தை, குஞ்சுக்குளம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து 14 மோட்டர் ஷெல்கள் மீட்க்கப்பட்டுள்ளன.

விசேட அதிரடிப் படையினர் மற்றும் ஓமந்தை பொலிஸார் இணைந்து நேற்று (22) இவற்றை மீட்டுள்ளனர்.

வவுனியா, ஒமந்தை, குஞ்சுக்குளம் பகுதியை சேர்ந்த மார்க்கண்டு சிவகுமார் எனும் நபர் தனது விவசாய கிணற்றினை நீர் இறைத்து கிணற்றினை துப்பரவு செய்த போது கிணற்றினுள் வெடிபொருட்கள் காணப்பட்டதினை அடுத்து ஒமந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனை அடுத்து அங்கு சென்ற பாதுகாப்பு தரப்பினர் குறித்த கிணற்றிணை பரிசோதித்துடன் மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஒமந்தை பொலிஸார் ஊடாக வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியினை பெற்று புளியங்குளம் விசேட அதிரடிப்படையினரால் குறித்த கிணற்றிக்குள் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது கிணற்றில் இருந்து 14 மோட்டார் செல்கள் மீட்கப்பட்டு செயலிக்க செய்வதற்காக விசேட அதிரடிப்படையினரினால் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.