பொதுத் தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டல்களை மீறுவோர்களுக்கு என்ன தண்டனை?

335 0

பொதுத் தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானியின் பிரகாரம் அதனை மீறுபவர் களுக்கு எதிராக ஆறுமாத காலம்வரை சிறைத் தண் டனை அல்லது ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர் தசில்வா தெரிவித்தார்.

இதுதொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர் தசில்வா தெரிவித்ததாவது,

தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளிவந்திருக் கின்றது. இந்த வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் சட்ட திட்டங்களை மீறும் யாராக இருந்தாலும் அந்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் யாராவது இந்த சட்டத்தை மீறிய தற்காக குற்றவாளியானால் அவருக்கு ஆறுமாதம் சிறைத் தண்டனை அல்லது ஆயிரம் ரூபாவுக்கு அதிகப்படாத அபராதம் விதிக்கலாம் என அவர் தெரிவித்தாா்.

அத்துடன் குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப் பட்டிருக்கும் நிபந்தனைகளுக்கமைய, தண்டனைச் சட்டத்துக்கமைவான குற்றங்களை யாராவது செய்தால் அவர்களுக்கு அந்த சட்டத்தில் இருந்து வெளி யேறி, குறித்த தண்டனைச்சட்டத்தின் அடிப்படையில் அல்லது தேர்தல் சட்டத்தை மீறும் பட்சத்தில் மேற்கொள்ளப்படும் குற்றத்துக்கமைய நடவடிக்கை எடுக்கமுடியும்.

இதுதொடர்பாக வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது.

மேலும் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டல் அடங்கிய வர்த்த மானியில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விதிமுறை களை மீறுபவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் பூரண அதிகாரம் பொலிஸாருக்கே இருக்கின்றது.

குறித்த வர்த்தமானி தேர்தல் அறிவிக்கப்பட்டு அதன் பெறுபேறுகள் வெளியாகும்வரையான காலத்துக்கு அமுலில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.