இரு கட்சி ஆதரவாளர்கள் சாவகச்சேரியில் நள்ளிரவில் மோதல்

337 0

சாவகச்சேரி, நுணாவில் பகுதியில் இரு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் நேற்று முன் தினம் நள்ளிரவு மோதிக் கொண்டதில், பெண் ஒருவர் உள் ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர்.

தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டுவதிலேயே நேற்று முன் தினம் இரவு 11.30 மணியளவில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த நால்வரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.