சிறிலங்காவில் ஹேரோயினுடன் இருவர் கைது

254 0

சிறிலங்கா- அத்துருகிரிய அரங்கல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ஒன்றில் 5 கிராம் 800 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 96 ஆயிரத்து 160 ரூபாய் பணமும், இராணுவ சீருடை தொகை ஒன்றும், தடைசெய்யப்பட்ட இரண்டு கத்திகள், தோட்டாக்கள் 2, முச்சக்கரவண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

39 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளார்.

இதேவேளை, கண்டி பெல்லேகெலே பிரதேசத்தில் 5 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

24 வயதுடைய வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேநபர் இன்று (18) தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளார்.