சிறிலங்காவில் நீரில் மூழ்கி இளைஞர் ஒருவர் மாயம்

226 0

சிறிலங்காவில் கெபுன்கொட பிரதேசத்தில் நீராடிக் கொண்டிருந்த நான்கு இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீரில் மூழ்கி மீட்கப்பட்ட மற்றுமொரு நபர் நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

18 வயதுடைய மினுவங்கொடை பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

பொலிஸார் மற்றும் கடற்படை சுழியோடிகள் இணைந்து காணாமல் போன இளைஞரை தேடி வருவதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.