சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

269 0

சிறிலங்காவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர் இந்தியாவில் இருந்து நாட்டுக்குத் திரும்பியவர் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில்  நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 689 ஆக அதிகரித்துள்ளது.