போதையூட்டப்பட்ட புகையிலை தூள்களுடன் ஒருவரை கைது (காணொளி)

359 0

amparai-shopஅம்பாறை சம்மாந்துறை மாளிகைக்காடு பகுதியில், வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரட்டுக்கள் மற்றும் அதிகசெறிவில் போதையூட்டப்பட்ட புகையிலை தூள்கள் போன்றவற்றை மதுவரித்திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதுடன் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு மாளிகைக்காடு பகுதியில் உள்ள வெளிநாட்டு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்திலேயே இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத்திற்கான மதுவரித்திணைக்கள அத்தியட்சர் தலைமையில் சென்ற குழுவினர் குறித்த சட்ட விரோத போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

இந்த பொருட்களில் சலவைத்தூள் அடைக்கப்பட்டு குறித்த சிகரட்டுகளும், போதையூட்டப்பட்ட புகையிலைத் தூள்களும் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்டுள்ளதாகவும், மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத்திற்கான மதுவரித்திணைக்கள அத்தியட்சர் தெரிவித்தார்.

இதன்போது 3000 சிகரட்டுகளும், ஆறரைக் கிலோகிராம் நிக்கோட்டின் செறிவு கூடிய புகையிலையில் தயாரிக்கப்பட்ட மாற்றீடுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத்திற்கான மதுவரித்திணைக்கள அத்தியட்சர் தலைமையில் சென்ற கல்முனை மதுவரித்திணைக்கள பரிசோதகர், மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர்கள், பயிற்சி உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினரே இந்த முற்றுகையினை நடாத்தியுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர் தப்பியோட முற்பட்டபோது, அவரை துரத்திச்சென்று கைது செய்துள்ளதாகவும், பொருட்களையும் கைதுசெய்யப்பட்டவரையும் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும், மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத்திற்கான மதுவரித்திணைக்கள அத்தியட்சர் தெரிவித்தார்.