உலக சமாதானம் மற்றும் பாதுகாப்பு அமைப்புடன் சிறீலங்காவும் இணைந்துகொண்டது!

312 0

unitednationsbanner-postஜெனீவாவைத் தளமாகக் கொண்டியங்கும் உலக சமாதானம் மற்றும் பாதுகாப்பு அமைப்புடன் சிறீலங்காவும் இணைந்துகொண்டுள்ளது.

இதனடிப்படையில் குறித்த அமைப்பின் சந்திப்பில் ஜெனீவாவிற்கான சிறீலங்காத் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க முதற் தடவையாக கலந்துகொண்டுள்ளார்.

அமைப்பின் பணிகளில் சிறீலங்காவும் செயற்றிறன்மிக்க பங்களிப்பை வழங்குமென அதன் தலைவர் பேராசிரியர் பிரன்சுவா ஹய்ஸ்பேர்க் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ரவிநாத் ஆரியசிங்க, உலக சமாதானம் மற்றும் பாதுகாப்பு அமைப்புக்கும் சிறீலங்காவுக்கும் நீண்ட கால உறவு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

குறித்த அமைப்பில் சிறீலங்காவும் இணைந்துகொண்டதனூடாக மேலும் பல உறவுகளை அதிகரிக்கமுடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.