மட்டக்களப்பில் திடீர் சோதனை நடவடிக்கை-10பேர் கைது

370 0

downloadமட்டக்குளி – சமித்புர பகுதியில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.விசேட அதிரடிபடையின் ஒத்துழைப்புடன் இன்று அதிகாலை 4.30 முதல் 9.30 வரை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பேர் கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஏனையோர் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆரம்ப கட்ட விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.