எனது ஆசனத்தை யாருக்கும் வழங்கத் தயார்-சபாநாயகர்

336 0

speaker-karu-jayasuriya-new2தனது ஆசனத்தை எந்தவொரு நபருக்கும் வழங்க தான் தயாராகவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.சபாநாயகர் ஆசனம் குறித்து தனக்கு எந்தவித பிரச்சினையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சபாநாயகரின் ஆசனத்தில் பாராளுமன்ற பொறியியலாளர் பிரிவைச் சேர்ந்த அதிகாரியொருவர் அமர்ந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் அளுவிஹார இன்றும் பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.இதற்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவத்தை வெளியிட்ட ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.