மதுரையில் கொரோனா சிகிச்சை அறையில் இறந்தவர்களின் உடல்கள்

248 0

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள், சிகிச்சை பெறுபவர்களின் அறையில் வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

மதுரையில் கொரோனா தொற்றால் 11 பேர் உயிரிழந்ததாக அரசு தெரிவித்துள்ளது. இந்தநிலையில் ராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்த இருவரின் உடல், சிகிச்சை பெற்று வருபவர்களின் அறையில் வைக்கப்பட்டதாக படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.இதுகுறித்து விளக்கமளித்த மருத்துவமனை டீன் சங்குமணி, இறந்தவர்கள் கொரோனாவால் தான் இறந்தார்கள் என்று உறுதியாக கூறமுடியாது எனவும், இருப்பினும் கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவமனை பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.