சென்னையில் கொரோனாவால் ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு

246 0

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னையில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தவர் வேல்முருகன்( 43). சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த இரண்டு நாட்காளகவே அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்து தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில், இன்று அதிகாலையில் வேல்முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவருடைய மறைவுக்கு பத்திரிக்கையாளர் சங்கங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து உள்ளனர்.