தமிழக அரசு வெளியிட்டிருக்கும அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது, “65 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், கர்ப்பிணி பெண்கள், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
- அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.
- எச்சில் துப்புவது முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும்.
- பணியாளர்கள் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.
- அனைத்து அலுவலகங்களிலும் தெர்மல் சோதனை கருவி பரிசோதனை, கிருமி நாசினி பயன்படுத்திய செய்த பின்னரே பணியாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்
- ஆலோசனைக் கூட்டங்களை (மீட்டிங்) நேரடியாக நடத்தாமல் வீடியோ கான்பரசிங் மூலமாக நடத்த அறிவுறுத்தல்
- எந்தவித அறிகுறியும் இல்லாத பணியாளர்கள் / பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
- நோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து பணிக்கு வரும் பணியாளர்களை அனுமதிக்க கூடாது. வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கலாம்
- ஒரு பணியாளர் அல்லது இரண்டு பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் முழு அலுவலகத்தை மூட வேண்டிய அவசியமில்லை. கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தபின் பணியை தொடரலாம்
- அதிகளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் கிருமிநாசினி தெளித்த பின் 2 நாட்களுக்கு அலுவலகத்தை மூட வேண்டும்” இவ்வாறு தமிழக அரசின் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.