கிளிநொச்சி- விவேகானந்தநகர் கிராமத்திலுள்ள ஸ்ரீமுருகன் ஆலயத்தின் கருவறையில் இருந்த வேலி மற்றும் முருகன், வள்ளி, தெய்வானை சிலைகள் திருடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு ஆலயத்தின் கூரை ஓடுகள் பிரிக்கப்பட்டு உள் இறங்கிய திருடர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். சிலைகளுடன் ஆலயத்தின் பயன்பாட்டில் உள்ள பல பொருட்களும் திருடிச் செல்லப்பட்டுள்ளன.
சுமார் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.