இளைய தலைமுறையினரை போதை பொருள் பாவனைக்குள் தள்ளுபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த உள்ளதாக சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் இளைஞர் சமூதாயத்தை போதை பொருள் பாவனையில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சீதுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனை கூறினார்.