சிறிலங்காவில் நாரஹேன்பிட்ட சிறைச்சாலையின் கூண்டுக்குள் சிறைக்கைதி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நேற்று (24) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் பண மோசடி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் நாரஹேன்பிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.