சிறிலங்கா குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் தமிழின துரோகி கருணா அம்மான்!

271 0

தமிழின துரோகி கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று(வியாழக்கிழமை) காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக வாக்மூலம் வழங்குவதற்காகவே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

2000 தொடக்கம் 3000 வரையிலான இலங்கை படையினரை, ஆனையிறவு பகுதியில் வைத்து ஒரே இரவில் கொன்றதாக கருணா தெரிவித்ததையடுத்து அவரைக் கைது செய்ய வேண்டும் என தென்பகுதியில் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.