சிங்கப்பூரில் சிக்கியிருந்த 94 இலங்கையர்கள் சிறிலங்காதிரும்பினர்

222 0
கொரோனா வைரஸ் காரணமாக சிங்கப்பூரில் சிக்கியிருந்த 94 இலங்கையர்கள் இன்று (24) சிறிலங்கா திரும்பியுள்ளனர்.

இன்று (24) மாலை 5.07 மணியளவில் அவர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.