மொனராகலை சிறைச்சாலையினுள் கைதியொருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நேற்று (23) பிற்பகல் குறித்த கைதி சிறைச்சாலை வைத்தியசாலையினுள் இவ்வாறு தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த கைதி இன்று (24) அதிகாலை உயிரிழந்துள்ளார். இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் விளக்கமறியலில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.