அம்பாறைக்கு விரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர்

250 0

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் திகாமடுல்ல ; தேர்தல் மாவட்ட வேட்பாளருமான கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்   (22) ; (23) திகதிகளில் குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜராகவில்லை.

இந்த நிலையில் இரு தினங்களிலும் அவர் ஆஜராகாமை ;குறித்து நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன

அத்துடன் அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சிலர் அம்பாறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் ; இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆனையிறவில் 2000-3000 வரையான இராணுவத்தினரை ஒரே நாளில் தான் கொலை செய்ததாக அவர் கூட்டம் ஒன்றில் கூறியது குறித்தே ; அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வு பிரிவுக்கு வருமாறு  22 ,  23  திகதிகளில் அழைக்கப்பட்டிருந்தார்.