விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்

223 0

 விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் நாளை (25) முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 3 நாள்களுக்கு இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் நிர்மாணப் பணிகள் இடம்பெறும் பகுதிகளை அண்மித்த இடங்களில் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 22,000 இற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.