அல்லாரையில் வாள்வெட்டு; ஒருவர் படுகாயம்!

271 0

யாழ்ப்பாணம் – கொடிகாமம், அல்லாரை பகுதியில் கடை ஒன்றின் உரிமையாளர் மீது நேற்று (23) இரவு 9 மணியளவில் இனந்தெரியாதவர்கள் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் குஞ்சுராசா அஜந்தன் (40-வயது) என்பவர் படுகாயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தனது கடையில் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், அவரை அழைத்து வாளினால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.