மத்திய வங்கி 400 பில்லியனை அச்சிட்டுள்ளது ! -ஹர்ஷ டி சில்வா

240 0

மத்திய வங்கி 400 பில்லியனை அச்சிட்டுள்ளது இதனால் நாட்டில் ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைந்து பணவீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியால் கடந்த செவ்வாய்க்கிழமை 115 பில்லின் ரூபா அச்சிட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

குறித்த பணம் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்குக் குறைந்த வட்டி அடிப்படையில் கடன்களை வழங்குவதாகப் பணம் அச்சிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

தற்போது, மக்கள் வங்கி சுமார் 400 பில்லியனுக்கு அதிகமான பணத்தை அச்சிட்டுள்ளது என்றும் இதனால் நாட்டில் ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைவதோடு பணவீக்கம் கடுமையாக அதிகரித்து என அவர் சுட்டிக்காட்டுகிறார்.

மக்கள் வங்கி அல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தப் பொருளாளரால் தீர்வுகளை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.