தொழிற்சங்கக் கோரிக்கைகளைநிறைவேற்றுவதில் கட்சிபேதம் பார்க்கப்படமாட்டாது-ஜனாதிபதி(படங்கள்)

402 0

president-3தொழிற்சங்ககோரிக்கைகளைநிறைவேற்றுவதில் கட்சிபேதம் பார்க்கப்படமாட்டாதுஎன்று ஜனாதிபதிமைத்ரிபாலசிறிசேனதெரிவித்தார்.

மகாவலிஅபிவிருத்திமற்றும் சுற்றாடல்துறைஅமைச்சர் என்றவகையில் ஜனாதிபதிமைத்ரிபாலசிறிசேனவும்மகாவலிஅபிவிருத்திசுற்றாடல்துறைஅமைச்சின்தொழிற்சங்கப்பிரிதிநிதிகளுக்குமிடையேநேற்றுமகாவலிஅபிவிருத்திஅதிகாரசபையில் இடம்பெற்றகலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலுக்கு ஜனாதிபதியினால் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தநிலையில்,இதற்குமுன்னர் ஜனாதிபதிக்கும்,தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்குமிடையிலானசந்திப்புகள்,தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் வேண்டுகோளின் பேரிலேயேநடைபெறுவதுண்டு.

இந்நிலையில் முதன் முறையாக ஜனாதிபதியினால் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருப்பதுகுறிப்பிடத்தக்கது.ஊழியர் பதவிஉயர்வுதொடர்பானபிரச்சினைகள்,சம்பளம் தொடர்பானபிரச்சிகைள் மற்றும் ஊழியர்களுடன் தொடர்புடையபல்வேறுபிரச்சினைகள் குறித்துதொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஜனாபதிபதிக்கு விளக்கினர்.

நாட்டின் அபிவிருத்திக்குமுக்கியபங்களிப்பைச் செய்கின்றவர்கள் என்றவகையில் அப்பிரதிநிதிகள் தமதுதொழில்ரீதியானபிரச்சினைக்குகலந்துரையாடல் மூலமாகதீர்வுகளைப் பெற்றுக்கொள்ளமுயற்சிப்பதையிட்டுதாம் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி,விரைவில் அமைச்சில் ஆறு உபகுழுக்களைநியமித்துபிரச்சினைகளுக்குஉடனடித் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்குநடவடிக்கைஎடுப்பதாகத் தெரிவித்தார்.

இதனைக் கண்காணிப்பதற்காக ஜனாதிபதிஅலுவலகத்தின் மேலதிகச் செயலாளர் ஒருவரையும் மகாவலிஅபிவிருத்திமற்றும் சுற்றாடல்துறைஅமைச்சின் மேலதிகசெயலாளர் ஒருவரையும் தமக்குக்கீழுள்ளதேசியஒருங்கிணைப்பு, இன நல்லிணக்கஅமைச்சின் மேலதிகசெயலாளரையும் கொண்டஒருபிரதானகுழுவைநியமிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதிதெரிவித்தார்.

சிறந்தசேவையைப் பெற்றுக்கொள்வதற்குஊழியர்களின் திருப்தியும் மகிழ்ச்சியுடன் கடமையைமேற்கொள்வதற்குத் தேவையானசூழலும் அமைத்துக்கொடுக்கப்படவேண்டும் எனக் குறிப்பட்ட ஜனாதிபதி,கட்சிபேதங்களின்றிநிறைவேற்றமுடியுமானஅனைத்துகோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்குஅடுத்தசிலமாதங்களில் நடவடிக்கைஎடுப்பதாகவும் குறிப்பிட்டார்.அமைச்சுக்களின் கீழ் உள்ளபாழடைந்தநிலையில் உள்ளகட்டிடங்கள் தொடர்பில் முன்பிருந்தஅரசாங்கங்கள் எந்தவொருதீர்வையும் வழங்கவில்லைஎன்பதால் அதுதொடர்பாகஒருஉடனடித் தீர்வைப் பெற்றுத்தருவதாக ஜனாதிபதிமேலும் தெரிவித்தார்.

மகாவலிஅபிவிருத்திமற்றும்சுற்றாடல்துறைபிரதிஅமைச்சர்அனுராதஜயரத்ன,மகாவலிஅபிவிருத்திசுற்றாடல்துறைஅமைச்சின் செயலாளர் உதய ஆர் செனவிரத்ன,மகாவலிஅதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் அநுரதிசாநாயக்கஆகியோரும்இந்நிகழ்வில்கலந்துகொண்டனர்.இதனைத்தொடர்ந்துமகாவலிஅதிகாரசபைஅதிகாரிகளுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் கலந்துரையாடல் நடைபெற்றதுடன் நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இங்குகலந்துரையாடப்பட்டது.

president president-3 president-2 president-1