முகமாலையில் இராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பளை கெற்பலியை சேர்ந்த இளைஞனே உயிரிழந்துள்ளார். முகாமலை பகுதியில் மணல் ஏற்றியவர் மீதே இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர்.
காயமடைந்த இளைஞன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையிலேயே அங்கு உயிரிழந்துள்ளார்.