ருவென்வெலிசாய சூடாமாணிக்கம் இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு

255 0

அனுராதபுரம் ருவென்வெலிசாயவில் வைக்கப்பட்டுள்ள வரலாற்று முக்கியத்துவமிக்க சூடாமாணிக்கத்தை பார்வையிடுவதற்கான வாய்ப்பு இன்று தொடக்கம் மக்களுக்கு கிடைக்கும் என்று ருவென்வெலிசாயவுக்கு பொறுப்பான சங்கைக்குரிய பல்லேகம ஹேமரத்த தேரர் தெரிவித்துள்ளார்.

சூடாமாணிக்கம் சமய அனுஷ்டானங்களின் பின்னர் நேற்று முன்தினம் அதற்குரிய விசேட பகுதியில் வைக்கப்பட்டதாகவும் தேரர் கூறினார்.

1939 ஆம் ஆண்டு மாணிக்கம் இங்கு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.