தும்முல்ல விபத்து சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு பிணை

239 0

பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இருவரை மோதி விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 11 ஆம் திகதி இரவு தும்முல்ல பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இருவரை குடிபோதையில் விபத்துக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த விபத்து சம்பவத்தில் பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.