யாழில் புகையிரதத்தில் மோதி இரு பசு மாடுகள் பலி!

273 0

யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற ரயில் இரு பசு மாடுகளை மோதித் தள்ளியுள்ளது.

யாழ். நாவலர் வீதிப் பகுதியில் நடந்த இச்சம்பவத்தில் பசு மாடு அங்கேயே உயிரிழந்துள்ளது.

மற்றைய மாடு எழுந்து நடக்க முடியாத நிலையில் அங்கேயே கிடந்துள்ளது.

காயமடைந்து நடக்க முடியாத நிலையில் கிடந்த மாட்டை, சம்பவ இடத்துக்கு வந்த யாழ். மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன், கால்நடை வைத்தியர்களான மாறன் மற்றும் பிரியந்தினி ஆகியோர் அப்பகுதி மக்களுடன் இணைந்து மீட்டு அருகில் உள்ள மர நிழலுக்கு அடியில் கொண்டு சென்று சேர்த்தனர்.

அத்துடன், காயமடைந்த மாட்டுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.